சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து பல இடங்களுக்கும் அவசரப் பயணம் மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்போருக்கு உதவியாக சென்னை போலிசார் தனியாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த அலுவலகத்துடன் 7530001100 என்ற எண் மூலம் அல்லது gcpcorona2020@gmail.com என்ற முகவரி மூலம் தொடர்புகொண்டு அவசர பயணத்துக்கான அனுமதிச் சீட்டு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.