மும்பை: மும்பைப் பிவாண்டி பகுதியில் இரு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன. மீட்புப் படையினர் இடிபாடுகளிலிருந்து நால்வரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால் மேலும் பலர் சிக்கியிருக்க லாம் என்று அஞ்சப்படுகிறது. கல்யாண் சாலையில் உள்ள அனுமன் தேகடி பகுதியில் உள்ள அந்தக் கட்டடம் நேற்றுக் காலை 8 மணியளவில் இடிந்து விழுந்தது. தேசியப் பேரிடர் பணிக்குழுவினரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கட்டடத்தில் வசித்து வரும் குடும்பங் களின் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.
அது மிகவும் பழையகாலக் கட்டடம் என்றும் 'அபாயமான கட்டடம்' என்ற பிரிவின் கீழ் இருப்பதாகவும் பிவாண்டி தாசில்தார் வைசாலி லம்பாதே தெரிவித்தார். ஜூலை 31ஆம் தேதி இரு மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் பலியானார்கள், 10 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் மக்களும் மீட்புப் பணியாளர்களும். படம்: ஊடகம்