நான்கு மாதங்களில் 14 குற்றச்செயல்கள்

வீட்டு உள்ளழகு வடிவமைப் பாளருக்கு நான்கு மாதங்களில் 14 முறை வாகன நிறுத்துமிட குற்றச்செயல்களைப் புரிந்த தற்காக 7,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. கேப்ரியல் ரவி ஜன கெரானுக்கு 46, அபராதம் கட்ட மூன்று முறை நினைவூட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அவற்றை அவர் புறக்கணித்ததால் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டது. 2010 செப்டம்பரிலிருந்து 2011 ஜனவரி வரையில் அவர் பலதரப்பட்ட வாகன நிறுத்துமிட குற்றச்செயல்களைப் புரிந்தார்.

நீதிமன்றத்தில் முன்னி லையாக வேண்டும் என்று ஐந்து முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் அவர் மீறியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. கடைசியாக இவ்வாண்டு ஏப்ரலில் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தைக் கட்டத் தவறினால் அவர் 14 நாட்கள் சிறைத்தண் டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அவர், தண்டனையைக் குறைக்க வேண்டும் அல்லது முழு அபராதத் தொகையைக் கட்டி முடிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து மேல் முறையீட்டு நீதிபதி சாவ் ஹிக் டின், நான்கு மாத தவணை முறையில் அபராதத்தைக் கட்ட அனுமதியளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!