ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மனித உரிமைகள் மன்றக் கூட்டத்தில் சிங்கப்பூரின் கொள்கைகள் தொடர்பான இரண்டாவது அனைத்துலக மறுஆய்வு அறிக்கையை வெளியுறவு அமைச்சின் பொதுத்தூதர் பேராசிரியர் சான் ஹெங் சீ சமர்ப்பித்து உரையாற்றினார். அவருடன் அமைச்சுகள், அரசாங்க அமைப்புகள் ஆகிய வற்றின் 11 அதிகாரிகள் உடன் சென்றனர். இந்த மாநாட்டில் 113 நாடுகள் உரையாற்றின. சிங்கப்பூர் கொள்கைகளில் பொதிந்திருக்கும் தத்துவங்கள், ஆக்கபூர்வ அணுகுமுறைகள் பற்றி விளக்கிய திருவாட்டி சான், சிங்கப்பூர் சிறிய நாடாக இருந் தாலும் இன, சமய பன்முகத் தன்மையைக் கருத்தில்கொண்டு அனைத்து சிங்கப்பூரர்களுக்குமான மனித உரிமையைப் பாதுகாத்து வருகிறது என்றார்.
சமூகப் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டம், 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்', 'மெடிஷீல்ட் லைஃப்', அனைத்து வய தினருக்குமான நாடு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் அவர் விளக்கினார். ஆசிய பசிபிக், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய வட்டார நாடுகள் மக்களின் நல்வாழ்வுக்கு முக் கியத்துவம் அளிக்கும் சிங்கப் பூரின் கொள்கைகளைப் பாராட் டிப் பேசின.
வெளியுறவு அமைச்சின் பொதுத்தூதர் பேராசிரியர் சான் ஹெங் சீ. படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்