சென்னை: சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்ட ஆர்.எஸ். பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால பிணை அளித்து நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார்.
திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை நேற்று அதிகாலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் போலிசார் கைது செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய பாரதி கூறுகையில், “நான் பேசியது சமூக ஊடகங்களில் திரித்துக் கூறப்பட்டுள்ளது.
“கோவையில் கொரோனா தடுப்புப் பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது புகார் அளித்தேன்.
“இந்நிலையில் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக என் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
“இதற்கெல்லாம் பயந்துவிட மாட்டோம். கொரோனா விவகார ஊழல் பற்றி தொடர்ந்து புகார் அளிப்போம்,” என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பாரதி பேசியதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண் குமார் அளித்த புகாரின் அடிப்படை யில் பாரதி கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர்.
ஆர்.எஸ். பாரதி கைதுக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கையை வரவேற்ப தாக பாஜக தேசிய பொதுச் செய லாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாரதியை அடுத்து காத்திருப்பு பட்டியலில் தயாநிதிமாறன் உள் ளாரா? என்றும் கேட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா கிருமியைப் பரவாமல் தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதை மூடி மறைக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
“இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களைப் பார்த்து ஒருபோதும் திமுக மிரளாது,” என்று குறிப் பிட்டுள்ளார்.
பாரதியைக் கைது செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கலாம் என அதிமுக அரசு மனப்பால் குடித்து வருவதாக மதிமுக பொதுச் செய லாளர் வைகோ கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான சொல்லைப் பயன்படுத்திய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை அதிமுக அரசு கைது செய்ததா என கேள்வி எழுப்பியுள்ள திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, இது ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்றார்.
இதற்கிடையே பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சட்டத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி விளக்கம் தந்துள்ளார்.
கொரோனா தடுப்புப் பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக துணை முதல்வர் மீது புகார் அளித்தேன். இதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்துவிட்டால் கல்யாணம் நிற்காது. ஊழல் குறித்த புகார் விடாமல் தொடரும்.