ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக மின்தூக்கி சுவரில் உள்ள கற்கள் உடைந்து விழுந்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டுக் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை 15 முறை மேற்கூரைகளும் 24 முறை தானியங்கி கண்ணாடிக் கதவுகளும் 20 முறை தடுப்புக் கண்ணாடிகளும் 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் ஒருமுறை விளக்குக் கண்ணாடியும் ஒரு முறை அறிவிப்புப் பலகை தொலைக்காட்சியும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது 67வது முறையாக மீனம் பாக்கம் உள்நாட்டு முனையத்தில் மின்தூக்கி அறையின் சுவரில் பதிக்கப்பட்ட இரண்டு அடி அகலமும் ஏழு அடி நீளமும் கொண்ட சலவை கற்களில் ஐந்து உடைந்து விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சென்னை விமான நிலையத்தில் 67வது முறையாக...
20 Aug 2016 09:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Aug 2016 08:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!