மும்பை: மற்ற மாநிலங்களுக்கு உத்தரப் பிரதேச தொழிலாளர்கள் தேவைப்பட்டால் அந்த மாநிலங்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று அண்மையில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
“உத்தரப் பிரதேச தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த உ.பி. அரசிடம் அனுமதி பெறவேண்டும் என யோகி ஆதித்யநாத் கூறினார். அதேபோல் இங்கு வேலை செய்ய வரும் அம்மாநிலத் தொழிலாளர்களும் மகாராஷ்டிர அரசின் அனுமதியைப் பெற வேண்டும். இங்கு வேலைக்கு வரவிருப்பவர்கள் மகாராஷ்டிர அரசிடமும் காவல்துறையிடம் பதிவுசெய்ய வேண்டும்,” என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளைச் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.