அமெரிக்காவில் கறுப்பின இளையர் ஒருவர் கொல்லப்பட்டதால் போலிசுக்கு எதிராக வெடித்த போராட்டம் பல நகரங்களுக்குப் பரவிவிட்டது. வாகனங்களுக்கும் கட்டடங்களுக்கும் தீயிடுவது, சேதப்படுத்துவது என போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதை அடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தேசிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளிட்ட 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டியானாபோலிசில் நடந்த போராட்டத்தின்போது மூவர் சுடப்பட்டதாகவும் அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் அந்நகர போலிஸ் தலைவர் தெரிவித்தார். (படத்தில்) லாஸ் ஏஞ்சலிஸில் சறுக்குப் பலகையைக் கொண்டு கடையை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்களில் ஒருவர். படம்: ஏஎஃப்பி