சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றின் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 307ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் சென்னையில் மட்டுமே 244 போ் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இந்த 307 பேரில் 90%க்கும் மேற்பட்ட மக்களுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,685 பேர் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகினர்.அதில், ஆக அதிகமாக சென்னை மாவட்டத்தில் 1,242 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இதன்மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,914ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5.93 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதில், 34,914 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 798 போ் பூரண குணம் அடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம் இதுவரை மாநிலத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கையும் 18,325ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தான் ஆக அதிகமாக 11,730 போ் குணம் அடைந்துள்ளனா்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.