புதுடெல்லி: டெல்லியில் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து 70% மக்கள் மெல்ல மெல்ல குணமடைந்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், “டெல்லியில் மிகவும் குறைவான நோயாளிகளுக்கே தற்போது மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே குணமடைந்து விடுகின்றனர். இன்றைய நிலையில், கொவிட்-19 நோயாளிகளுக்கான 9,900 படுக்கைகள் காலியாக உள்ளன. நாட்டில் கிருமித்தொற்று பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் உள்ள டெல்லியில் 97,200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 68,256 பேர் குணமடைந்துவிட்டனர். இதனால் அங்கு குணமடைவோர் விகிதம் 70% ஆக அதிகரித்துள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.