விழுப்புரம்: நட்சத்திரத் தங்குவிடுதியின் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாகப் பலியாகினர். நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேனிமலையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரிகள் மணிகண்டன் (35 வயது), சரவணன் (40 வயது), வடிவேல் (35 வயது) ஆகியோர் அப்புதிய கட்டடத்தின் இரண்டாவது மாடியின் மேல் பகுதியில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதையடுத்து மூவரும் கீழே விழுந்தனர். இவ்விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
கட்டுமானம் இடிந்து விழுந்து விபத்து: இருவர் பரிதாப பலி
9 Sep 2016 10:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Sep 2016 07:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!