‘கலகலப்பு 2’ படத்தை அடுத்து இயக்குநர் சுந்தர்.சியும் நடிகர் ஜெய்யும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.
‘கலகலப்பு 2’க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதுடன் வசூலும் திருப்திகரமாக இருந்தது.
இதையடுத்து ஜெய்யை நாயகனாக்கி இன்னொரு படத்தை இயக்க தயாராகி உள்ளாராம் சுந்தர்.சி. இதை அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்க உள்ளது.
சுந்தர்.சி.யும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல். மிக விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.தற்போது ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகும் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.
ஊரடங்கு முடிந்ததும் முதலில் இந்தப் படம் வெளியாகுமாம்.