லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் மகாந்த் நித்ய கோபால் தாசுக்கு கிருமி தொற்றியது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறங்காவலர் குழுவின் தலைவர் என்ற வகையில் ராமர் கோவிலுக்கான பணிகளை முழு வீச்சில் கவனித்து வந்தார் நித்ய கோபால் தாஸ்.
அண்மையில் அயோத்தி ராமஜென்ம பூமியில் நடைபெற்ற ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு பூசையின்போது பிரதமர் மோடியுடன் அமர்ந்திருந்தார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென்படேல் உள்ளிட்டோரும் நித்ய கோபால் தாஸுடன் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.