கவுண்டமணி நலமாக உள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கவுண்டமணி மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதை அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி மறுத்துள்ளார். "அவ்வப்போது கவுண்டமணியைக் குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. "அண்மையில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவைக் குறித்தும் இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு வதந்திகள் காணாமல் போயின. "சற்று முன்புதான் கவுண்டமணியைச் சந்தித்தேன். உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருந்தார். விரைவில் அவர் நடிக்கும் அந்தப் படத்தின் அறிவிப்பு வெளிவரும். "மேலும் அப்படத்தின் துவக்க விழாவில் செய்தியாளர்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். எனவே உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார்," என்று விஜய முரளி கூறியுள்ளார்.
கவுண்டமணி நலம் குறித்து வதந்தி
20 Sep 2016 07:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Sep 2016 07:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!