கொரோனா ஊரடங்கு உத்தரவால் தனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாகக் கூறியுள்ள சிலை மனிதன் அப்துல் அஜிஸ், தற்போது ஊதியம் எதுவும் வழங்கப்படாததால், வேறு ஏதேனும் புதிய வேலைக்குச் செல்ல உள்ள தாகக் கூறியுள்ளார்.
சென்னையில் புகழ்பெற்ற சுற்று லாத்தலங்களில் ஒன்றாக விளங்கும் விஜிபி கோல்டன் பீச்சில் கடந்த 37 வருடங்களாக இவர் பணிபுரிந்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக அனைத்து பொழுதுபோக்குத் தலங் களும் மூடப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் முதல் கடற்கரை மீண்டும் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனினும், இதுவும் உறுதி யான அறிவிப்பு அல்ல.
இந்நிலையில், வறுமை காரணமாக தன்னிடம் உள்ள பொருட்களை விற்று பிழைத்து வருவதாகக் கூறும் அஜிஸ், “நான் 1985 முதல் 37 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். பலமுறை இப்பணியால் எனது உடல்நலம் பாதிக்கப் பட்டு, வேலையில் இருந்து விலகுவதாக நிர்வாகத்திடம் கூறினேன்.
“ஆனால், நிர்வாகம் என்னைச் சமாதானம் செய்து ஊதியத்தில் ரூ.2,000 அதிகரித்து பணியில் தொடர வைத்தது.
“இப்போதைய நிலையில் ஊதி யம் இன்றி மேலும் காலத்தை ஓட்டமுடியாது என்பதால் வேறு பணிக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்.
“சிலை மனிதனாகப் பணிபுரிவது எளிதானது அல்ல. உணவுப் பழக்கம், தினமும் யோகாசனம், மேலும் சில உடற்பயிற்சிகள் செய்வதால்தான் நான் இதைச் சரிவர செய்து வருகிறேன். இங்கு வருகை தந்த பிரபலங்களான மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், விஜய காந்த், விக்ரம், அர்ஜுன் ஆகியோர் என்னைப் பாராட்டி புகழ்ந்துள்ளனர். இருப்பினும், பலரும் எனது கவனத்தைத் திசை திருப்ப முயன்றாலும் நான் அதைக் கவனிக்காதது போல் சிலையாக நிற்பேன்,” எனக் கூறுகிறார்.
விஜிபி கோல்டன் பீச் கடற்கரைப் பகுதியின் நுழைவாயிலில் சிறிதும் ஆடாமல் அசையாமல் நிற்கும் ‘சிலை மனிதன்’ அப்துல் அஜிஸ்.
இந்த வாயிற்காவலருக்கு பல லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.