சிங்கப்பூரில் இன்று (செப்டம்பர் 22) நண்பகல் நிலவரப்படி புதிதாக 21 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,627 ஆகியுள்ளது.
கடந்த மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு ஆகக் குறைவான கொவிட்-19 சம்பவங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
இன்று அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில், உள்ளூர் சமூகத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.