மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று பிற்பகல் நிலவரப்படி 39ஆக அதிகரித்தது.
பிவாண்டி என்னுமிடத்தில் 1984ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்தக் குடியிருப்பு கட்டடம் மிக மோசமான நிலையில் இருந்தது.
திங்கட்கிழமை அதிகாலை கட்டடம் திடீரென இடிந்ததில் 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர்.