கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 34 வயது ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
கொள்ளைச் சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. சிராங்கூன் ரோடு அருகே உள்ள ஓவன் ரோட்டில் 75 வயது முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக தங்களுக்கு புகார் வந்ததென போலிசார் கூறினர்.
முதியவரிடமிருந்து நகைகளும் கைபேசியும் பறிக்கப்பட்டதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். தீவிர விசாரணைக்குப் பின்னர் ஹவ்காங் அவென்யூ 1ல் சந்தேக நபர் பிடிபட்டார்.
காயம் ஏற்படுத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர் மீது இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு முதல் 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் பிரம்படியும் ஆடவருக்கு விதிக்கப்படலாம்.