சென்னை: எந்தக் காலத்திலும் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்காது என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார்.
“ஈழப்போரின் போது அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. போர் தொடர்பான செய்திகள் மறைக்கப்பட்டன.
“தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட தேர்தல் காலத்தில் ஈழம் ஒரு பிரச்சினை அல்ல என்று கூறின.
“எமது இனத்தை யார் அழித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்,” என்று சீமான் மேலும் தெரிவித்தார்.