சிங்கப்பூர் நேரத்துக்கு ஏற்ப சாய்ந்து செயல்படும் நாடு என்ற எண்ணம் மற்ற நாடுகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டிருக்கிறார். "சிங்கப்பூர் தனக்குச் சொந்த மான, உறுதியான ஒரு நிலையை கொண்டிருக்க வேண்டும். யாரிடம் பேசினாலும் எந்த நாட்டில் எந்தத் தலைநகரில் இருந்தாலும் தன் சொந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்," என்று திரு லீ குறிப்பிட்டார். பிரதமர், சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் அரசதந் திர உறவு ஏற்பட்டு 50 ஆண்டு காலம் ஆவதைக் குறிக்கும் வகை யில் அந்த நாட்டிற்கு நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண் டிருந்தார். அந்தப் பயணம் நேற்று முடிந்தது. அப்போது தோக்கியோ வில் செய்தியாளர்களிடம் திரு லீ சிங்கப்பூரின் அடிப்படை வெளி யுறவுக் கொள்கை அணுகுமுறை பற்றி பேசினார்.
"நீங்கள் உரையாற்றும்போது அந்த உரையின் சாராம்சம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் முயன்று வரு கிறேன். வாஷிங்டன், ஹாங்சூ, தோக்கியோ, ஐரோப்பா அல்லது மாஸ்கோ எங்கிருந்தாலும் அங்கு தலைவர்களுடன் பேசும்போது அவர்களிடம் நான் கூறுவதும் இதுதான்," என்றார் திரு லீ. சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை பற்றி குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூருடன் தோழமை உணர்வைக் கட்டிக் காக்க விரும்பும் எல்லா நாடுகளு டன் நட்புறவைக் கட்டிக்காப்பதே அந்த அணுகுமுறை என்றார்.
இருந்தாலும் சிங்கப்பூரின் நட்பு நாடுகளிடையே நிலவும் உறவு, அப்போதைக்கு அப்போது தென் சீனக் கடல் எல்லைப் பிரச்சினைப் போன்ற பிரச்சினைகளால் சிக்க லாகக்கூடும் என்பதைப் பிரதமர் ஒப்புக்கொண்டார். "அத்தகைய சூழ்நிலைகளில் நாம் எந்த நிலையை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கும். பிரச்சி னையில் சம்பந்தப்பட்டுள்ள எல்லா நாடுகளோடும் நமது உறவைக் கட்டிக்காக்க நம்மால் எந்த அள வுக்கு முடியும் என்பதையும் பற்றி நாம் முடிவு செய்ய வேண்டியி ருக்கும்," என்றார் அவர்.