சிங்கப்பூரின் ஆக உயரமான மெர்லயன் சிலையை இடிக்கும் பணிகள் செந்தோசாவில் தொடங்கிவிட்டன. 37 மீட்டர் உயரத்தில் நிற்கும் இச்சிலைக்குப் பதிலாக செந்தோசாவின் வடக்கு, தெற்குக் கரையோரப் பகுதிகளை இணைக்கும் புதிய பாதை ஒன்று அமைக்கப்பட உள்ளது. செந்தோசா தீவையும் எதிரே உள்ள புலாவ் பிரானி தீவையும் ஒரு முன்னணி பொழுதுபோக்கு, சுற்றுலா இடமாக மாற்றுவது தொடர்பான பெருந்திட்டம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய சிற்பக்கலை நிபுணர் ஜேம்ஸ் மார்டின் சிலையை 1995ஆம் ஆண்டில் வடிவமைத்துக் கட்டினார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்