அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு அதிபர் டிரம்ப் நியமித்த எமி கோனி பாரெட்டுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது.
திரு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் செனட் சபையில் 52-48 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் ஏமி கோனி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து 48 வயது பாரெட் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் முன்னிலையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
சென்ற 18ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியான ரூத் பேடர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு காலமானார்.
இதனால் காலியான இடத்தை நிரப்பும் முயற்சியாக மேல் முறையீட்டு நீதிபதியான எமி கோனி பாரெட்டை டிரம்ப் அப்பதவிக்கு நியமித்தார்.
இதற்கு முன்பு டிரம்ப்பின் குடி யரசுக் கட்சியைச் சேர்ந்த இரண்டு அதிபர்கள் தலா ஒரு முறை உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து உள்ளனர்.
2017ல் நீல் கோர் சச்சும் 2018ல் பிரெட் கேவன்னாகும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய அதிபர் டோனல்ட் டிரம்ப், திங்கள் இரவு நடந்த பதவி யேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய திரு டிரம்ப், “அமெரிக்காவின் பாரபட்சமற்ற சட்ட வரலாற்றில் முக்கிய தருணம் இது,” என்றார்.
“பாரெட் மிகவும் திறமையான சட்ட கல்விமான், நமது நாட்டின் உச்ச நீதித்துறையில் அவர் சிறப்பாக பணியாற்றுவார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதியான கிளாரன்ஸ் தாமஸ், பாரெட்டுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் பேசிய பாரெட், நாடாளு மன்றம் அதிபர் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் நீதிபதி,” என்றார்.
நீதிபதி பொறுப்புக்கு பாரெட் பெயரை அதிபர் டிரம்ப் அறிவித்தபோது ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் முடிந்தபிறகே நியமனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி பாரெட் நீதிபதியாகியிருப் பது தேர்தலுக்கு முன்பு டிரம்புக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படு கிறது.
அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர், இறக்கும் வரை பதவியில் நீடிக்க முடியும்.