கோலாலம்பூர்: கிளந்தான் சுல்தான் ஐந்தாம் சுல்தான் முகம்மது மலேசியாவின் அடுத்த மாமன்னராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இப்போதைய மாமன்னர் கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்சம் ஷாவின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் வரும் டிசம்பர் 12ல் முடிவுக்கு வந்ததும் சுல்தான் முகம்மது டிசம்பர் 13ஆம் தேதி மாமன்னராகப் பதவி ஏற்பார். இவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவியில் நீடிப்பார். பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை துணைப் பேரரசராக ஆட்சி யாளர் மன்றம் தேர்ந்தெடுத்தது.
தென்கொரியாவில் பேருந்து விபத்து சோல்: தென்கொரியாவில் சுற்றுலா பேருந்து ஒன்று நெடுஞ்சாலை தடுப்புக் கம்பியில் மோதி தீப்பற்றிக் கொண்டதில் 10 பேர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். அந்தப் பேருந்தில் 19 பேர் சென்றதாகக் கூறப்பட்டது. பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.