தமிழ் முரசு வாசகர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது லிட்டில் இந்தியாவில் உள்ள தென்காசி சாரல் உணவகம்.
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 29ஆம் தேதி அந்த உணவகத்தில் தமிழ் முரசு நாளிதழை வாங்குவோருக்கு ஒரு கோழிப் பிரியாணி இலவசமாக வழங்கப்படும். இந்தச் சலுகை முதலில் வரும் 200 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.
எண் 20 அப்பர் வெல்டு சாலை, சிங்கப்பூர் 207377 எனும் முகவரியில் அமைந்துள்ள உணவகத்தில் அன்றைய தினம் தமிழ் முரசு நாளிதழ் விற்கப்படும்.
உணவகத்தில் நாளிதழை வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும்.
அன்று காலை 9 மணிக்கு இந்தச் சலுகை தொடங்கும்.
ஒரு கோழிப் பிரியாணி பொட்டலத்துடன் முட்டை, தயிர் பச்சடி ஆகியவை வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ‘தென்காசி சாரல்’ உணவகம், முதல்முறையாக இத்தகைய சலுகையை அறிவித்துள்ளது.
“தமிழ் முரசு நாளிதழின் வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இலவசமாக பிரியாணியை வழங்குவதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறோம்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை வாசகர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார் அந்தக் கடையின் உரிமையாளரான 37 வயது திரு ஷேக் முஹம்மது.