உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அதன் பொன்விழாக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து 30 முதல் 50 விழுக்காட்டுத் தள்ளுபடியில் புத்தக விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு, அந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக்கணிதம் தொடர்பான நூல்கள், அகராதி, அரசு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் என அரிய நூல்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
டிசம்பர் முதல் ஜனவரி வரை வார நாட்களில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நூல்களை வாங்கலாம். இணையம் மூலம் பதிவு செய்வதன் மூலம் நூல்களைப் பெறலாம். தமிழ் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு இந்தத் தள்ளுபடி விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-22542992, 22540087 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.