புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6ல் நேற்றுக் காலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. காலை 8.00 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீ அணைக்கும் வாகனமும் தீ அணைக்கும் மோட்டார் சைக் கிளும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் அனுப்பிய காணொளியில் கருப்பு நிற காரின் முன்பக்கம் தீப்பற்றி எரிவதைக் காண முடிந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
கருப்பு நிறக் கார் தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளி. படம்: யுடியூப்