பிரதமர் லீ சியன் லூங்கின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக தி ஆன்லைன் சிட்டிசன் இணையப்பக்கத்தில் ஆசிரியராக டெரி ஸூவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த வழக்கில் மறைந்த திரு லீ குவான் இயூவின் வழக்கறிஞரான திருவாட்டி குவா லிம் லி நேற்று சாட்சியம் அளித்தார்.
அவரிடம் டெரி சூவின் வழக்கறிஞர் திரு லிம் தியேன் குறுக்குவிசாரணை நடத்தினார்.
திரு லீ குவான் இயூவுக்காக மொத்தம் ஆறு உயில்களை திருவாட்டி குவா தயாரித்தவர்.
முதல் நான்கு உயில்களில் தமது ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்க வேண்டும் என்ற குறிப்பு முதல் நான்கு உயில்களில் இடம்பெற்றி ருந்ததை திருவாட்டி குவா உறுதி செய்தார்.
ஐந்தாவது மற்றும் ஆறாவது உயில்களில் அந்தக் குறிப்பு இடம்பெறவில்லை என்றார் அவர்.
ஆனால் திருவாட்டி குவா தயாரிக்காத ஏழாவது மற்றும் கடைசி உயிலில் அந்தக் குறிப்பு சேர்க்கப்பட்டது.
சொத்தில் தமது மகளுக்குக் கூடுதல் பங்கு கொடுக்க திரு லீ குவான் இயூ தம்மிடம் கூறியிருந்ததாக திருவாட்டி குவா தெரிவித்தார்.
ஆனால் கடைசி உயிலில் மூன்று பிள்ளைகளுக்கும் சரிசமமான பங்கு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திரு லீ குவான் இயூவின் ஆக்ஸ்லி சாலை வீடு அரசிதழில் இடம்பெற்றிருப்பதைக் காட்டும் ஆவணங்களைக் குறைந்தது இரண்டு முறை தேடியதாகவும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவரிடம் தெரிவித்ததாகவும் திருவாட்டி குவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆக்ஸ்லீ சாலை வீடு அரசிதழில் இடம்பெற்றிருப்பதால் அதை இடிக்க முடியாது என்று தமது தந்தையைத் தமது சகோதரரான பிரதமர் லீ சியன் லூங் நம்ப வைத்ததாக திரு லீ குவான் இயூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் குற்றம் சுமத்தியதாக திரு ஸூ தமது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.