லிவர்பூல் தொடர்ந்து 68 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த சாதனையை நேற்று அதிகாலை பர்ன்லி குழு முடிவுக்கு கொண்டு வந்தது. லிவர்பூல் தனது சொந்த மைதானத்தில் 0-1 என பர்ன்லியிடம் தோல்வி கண்டதை, “முகத்தில் ஓங்கி விடப்பட்ட குத்து,” என லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் வர்ணித்துள்ளார். எனினும் அதற்கான முழுப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.
பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் முதல் நிலையில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவைவிட ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள லிவர்பூல் அணி ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது.
“இது கடுமையான நிலை, விளக்கிக் கூற முடியாத ஒன்று. நாம் நினைப்பது நடக்கவில்லை என்றால், முயற்சியை மேலும் மேலும், கடினமாக, விடாமல் தொடர்ச்சியாக, ெசய்ய வேண்டும்.
“இந்த ஆட்டத்தில் தோற்காமல் இருப்பது அவ்வளவு கடினமான வேலை இல்லை, அப்படியும் தோற்றுவிட்டோம்,” என்று அவர் புலம்பினார்.
நேற்றைய ஆட்டம் முடிய ஏழு நிமிடங்களே உள்ள நிலையில், லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் கோல் எல்லைக்குள் பர்ன்லி குழுவின் ஆஷ்லி பார்ன்ஸை தடுக்கிவிட்டார். அதில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி பார்ன்ஸ் கோல் போட லிவர்பூலின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
நட்சத்திர முன்னணி ஆட்டக்காரர்களான முகமது சாலாவையும் ராபர்ட்டோ ஃபெர்மினோவையும் தொடக்க வீரர்களாக களமிறக்காத கிளோப், மற்றோர் தாக்குதல் ஆட்டக்காரரான டிவோக் ஒரிகி மீது நம்பிக்கை வைத்து அவரைக் களமிறக்கினார். ஆனால் அவரோ கோல் போடக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை வீணடித்தார்.
இது பற்றிக் கூறிய கிளோப், “இது என்னுடைய தவறுதான், வேறெதுவும் இல்லை. இனி சரியான முடிவுகளை எடுப்பதுடன், சரியாக விளையாட வேண்டும்,” என்று விளக்கினார்.
பின்னர் மாற்று ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாலாவும் ஃபெர்மினோவும் ஆட்டத்தின் போக்கை மாற்றத் தவறினர். சாலா உைதத்த பந்தை பர்ன்லி கோல்காப்பாளர் வலைக்குள் புகாமல் தடுத்தார். ஃபெர்மினோ தமக்குக் கிடைத்த வாய்ப்பை கோல் கம்பத்தின் மீது உதைத்து வீணடித்தார்.
இந்த ஆட்டத்துக்கு முன் தமது குழு வெற்றி பெற தவிப்பது தமக்கு கவலையளிக்கவில்லை என்று கூறிய கிளோப்புக்கு தற்பொழுது உண்மையிலேயே ஒரு பெரிய பிரச்சினை உருவாகியிருப்பதாக பிபிசி ெசய்தித் தகவல் கூறுகிறது.
இந்த ஆட்டம் பற்றிக் கருத்துைரைத்த பர்ன்லி குழு நிர்வாகி, ஷோன் டைக், “நாங்கள் ஆட்டத்தின் அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்தினோம். மிகவும் கடுைமயாக விளையாட வேண்டியிருந்தது, அதோடு இந்த மாதிரி ஆட்டங்களில் கவனத்தை சிதறவிடாமல், கட்டுக்கோப்புடன், சோர்வுக்கு இடம் கொடுக்காமல் விளையாட வேண்டும்.
“எங்களுக்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தது, அதைப் பெற நாங்கள் விடாமல் முயற்சி செய்தோம். ஆனால், எது எப்படியோ, முதலில் காற்பந்து ஆட்ட அடிப்படை அம்சங்களில் கவனம் வேண்டும். அதை எங்கள் வீரர்கள் சிறப்பாகச் செய்தனர்,” என்று பெருமிதத்துடன் விளக்கினார்.