தர்மபுரி: ஜெயலலிதாவுக்குத் தெரி யாமல் பல சொத்துகளுக்கு ரேகை உருட்டப்படுகிறது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். தர்மபுரியில் திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிர மணியின் திருமண விழாவில் கலந்துகொண்டு மு.க. ஸ்டா லினும் துரைமுருகனும் பேசினர். "கடந்த அதிமுக ஆட்சியை அவசர சிகிச்சைப் பிரிவில் இருப் பதாக விமர்சனம் செய்திருக் கிறேன். இப்போது அப்படி பேச முடியாத சூழல் நிலவுகிறது," என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
அதே சமயத்தில் "ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் பல சொத்து களுக்கு கைரேகை உருட்டப்படு கிறது," என்று துரைமுருகன் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். "உடல்நலம் பாதிக்கப் பட்டபோது முன்னாள் முதல் வர்கள் பலர் ஆட்சியை விட்டுச் சென்றுள்ளனர். தற்போது அதிமுக அரசு செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண் ணமும். ஆனால் முதல்வர் நலமுடன் உள்ளார். அவர் தானே எழுந்து உணவு உண்ணுகிறார், பேசுகிறார் என்றெல்லாம் அதிமுக வினர் சொல்கிறார்கள்.