தற்காப்பு அமைச்சுக்கும் சிங்கப் பூர் ஆயுதப்படைகளுக்கும் புத் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு $164 மில்லியன் மிச்ச மாகியிருக்கிறது. இது சென்ற ஆண்டு அளவைவிட 16% அதிகம். இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் இத்த கைய புத்தாக்கங்களின் முக்கியத் துவத்தை வலியுறுத்தினார். அன்றாட முயற்சிகளில் தற் காப்பு அமைச்சின் உற்பத்தித் திறன், புத்தாக்க நாள் 2016 விருது (பிரைட்) வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மரினா பே சேண்ட்ஸ் காட்சிக்கூடம், மாநாட்டு நிலையத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஓங் பேசினார்.
இந்த விருது வழங்கும் நடைமுறை 35 ஆண்டு காலமாக அமலில் இருந்து வருகிறது. தற்காப்பு அமைச்சிலும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளிலும் உன்னதம், புத்தாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாட்டுக் கலாசாரத்தை இந்த விருது இயக்கம் மேம் படுத்துகிறது.