தமிழகத்தில் ஸிக்கா கிருமி பரவ வாய்ப்பே இல்லை: அமைச்சர் உறுதி

சென்னை: தமிழகத்தில் ஸிக்கா கிருமி இதுவரை கண்டறியப்பட வில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "ஸிக்கா கிருமி நம் நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தும், அந்நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகத் தமிழகத்தில் ஸிக்கா கிருமி பரவ வாய்ப்பு அறவே இல்லை. தமிழகத்தில் உள்ள துறைமுகம், விமானநிலையம் ஆகிய இடங்களில், ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் அறிகுறிகள் உள்ளனவா எனப் பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஸிக்கா கிருமி குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை," என்று விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!