போதைப்பொருள் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த இரு நாட்களில் பல இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் $610,000 மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது.
கைதான மூவரில் ஒருவர் பெண். கைதான மூவரும் 28 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்
என்று தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் மூவரின் மீதான விசாரணை தொடர்கிறது.