வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புளோக்குகள் முன்பு இருந்ததை விட இப்போது அதிக பாதுகாப்பு உள்ளவையாக இருக்கின்றன. இந்தக் கழகம் தன்னுடைய வடி வமைப்புகளைத் தொடர்ந்து மேம் படுத்திவருவதும் பாதுகாப்புமிக்க, நம்பகத்தன்மைமிக்க கட்டட, கட்டுமான முறைகளைக் கழகம் பயன்படுத்திவருவதும் இதற்கு காரணங்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அல்ஜுனிட் குழுத்தொகுதி யைச் சேர்ந்த உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் தலைவர் லோ தியா கியாங் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித் தார். கட்டடங்களின் வடிவமைப்பு, பயன்படுத்தப்படும் சாதனங்கள் தொடர்பிலான வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பற்றி திரு லோ கேள்வி எழுப்பினார். தெம்பனிசில் அண்மையில் ஒரு புளோக்கின் நிழல்மாடம் பெயர்ந்து விழுந்துவிட்டது.
தோ பாயோ லோரோங்7 அருகே கட்டுமானப் பணி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்