தென்காசியில் கடந்த 45 நாட்களாக சுவரொட்டி ஒட்டி தேடப்பட்டு வந்த ஒரு ஒன்றரை வயது குழந்தையும் அதன் பாட்டியும் சாக்குமூட்டைக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வட்டிக்கு கொடுத்த கடன் பணத்தை திருப்பிக்கேட்டு தொந்தரவு கொடுத்ததால், பேத்தி சாக்ஷியையும் பாட்டி கோமதி அம்மாளையும் நால்வர் கொலை செய்து முட்புதரில் வீசியது போலிஸ் விசா ரணையில் தெரியவந்தது.
நெஞ்சைப் பதறவைக்கும் இந்தச் சம்பவம் தொடர்பில், வீரபாண்டி அம்மாள், செல்லப்பா, மகேஸ்வரி, பூதத்தான் ஆகிய நால்வர் கைதாகி உள்ளனர்.
தென்காசி, கீழப்புலியூரைச் சேர்ந்தவர் கோமதி அம்மாள், 55.
தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி அம்மாள், 55. இவர் கோமதி அம்மாளிடம் ரூ.20,000 கடன் வாங்கி உள்ளார். அசலுக்குமேல் வட்டி கட்டிய பிறகும் வீரபாண்டி அம்மாளிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கோமதி அம்மாள் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணை தொடர்கிறது.