சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பத்தில் ஒன்பது பேர் டிரேஸ்டுகெதர் எனும் தொடர்பு தடமறிதல் திட்டத்தில் சேர்ந்து உள்ளனர்.
சுமார் 4.7 மில்லியன் குடியிருப்பாளர்கள் டிரேஸ்டுகெதர் செயலியைத் தங்கள் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற்று உள்ளனர் என்று அறிவார்ந்த தேசத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
டிரேஸ்டுகெதர் மற்றும் சேஃப்என்ட்ரி திட்டங்களால். இப்போது தொடர்புத் தடமறிதலுக்கு ஒன்றரை நாட்களுக்குக் குறைவாகத் தேவைப்படுகிறது.
முன்பு அதற்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டன என்று குறிப்பிட்ட அமைச்சர், மூன்றாம் கட்டத் தளர்வில் அன்றாட நடவடிக்கைகள் தொடர்ந்து பாதுகாப்புடன் நடைபெற தொழில்நுட்பம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்றும் விவரித்தார்.