கல்விக் கட்டண நிதி உதவி உள்ளூர் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமல்லாது இங்குள்ள தனியார் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கல்விக் கட்டண நிதி உதவி, கல்வி மானியம் ஆகியவற்றை வழங்கி வருகிறது சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியம். தனியார் பல்கலைக்கழக மாண வர்கள் தங்களது ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 50% வரை இந்த நிதி உதவியைக்கொண்டு செலுத்தலாம். கடந்த சனிக்கிழமை 124 நிதித் தேவையுடைய உயர்நிலை மாணவர் களுக்கு $265,000 கல்வி உதவித் தொகையை வாரியம் வழங்கியது.
கல்வி நிதி உதவி பெற்ற மாணவர்களான (இடமிருந்து) காஜல் நார் சிங், கேசவர்த்தினி, ஷர்மா நாயர், வாஹினி, நிஷாந்தி. படம்: சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியம், செய்தி: யாஸ்மின் பேகம்