நச்சுவாயுவை நுகர்தல் அல்லது பூமிக்கடியில் உள்ள சாக்கடைகளில் தவறி விழுவது போன்றவற்றால் கடந்த டிசம்பருடன் முடிவடைந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் 340 பேர் இறந்தனர்.
திரு பெத்தண்ணா போன்ற ஆயிரக்கணக்கானோருக்கு கை, கால்களில் வெட்டுக்காயங்கள், தீராத நாள்பட்ட உடல் வலி, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுவது சாதாரணம்.
“இதில் எது மிகுந்த மனவலியைத் தருகிறது என்றால் நாங்கள் அனுபவிக்கும் அவமானம்தான்,” என்று குமுறுகிறார் திரு பெத்தண்ணா.
வசைபாடுவதும் அடிப்பதும் அவருக்கு அவ்வப்போது சாதாரண மாக நிகழும் சம்பவங்கள். “நான் சார்ந்திருக்கும் சாதியினரை மக்களில் சிலர் அவமானப்படுத்துவது உண்டு. பேருந்தில் ஏறினால், சிலர் என்னை உட்காரவிடமாட்டார்கள். ஒருவேளை என் மீது துர்நாற்றம் வீசுகிறதோ என்னவோ.
“சிலர் குடிக்க, கை கழுவ தண்ணீர் தரமாட்டார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இவை எல்லாம் மனதுக்கு மிகுந்த வலியைக் கொடுக்கின்றன. இருப்பினும், வேதனையை வெளிக்காட்டாமல் எல்லாவற்றையும் சிரித்த முகத்துடனேயே தாங்கிக்ெகாள்வேன்,
“ஆனால் அன்றைய பொழுதின் முடிவில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவேன்,” என்று அழாத குறையாகக் கூறுகிறார் இவர்.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றுவது நாகரிக இந்தியாவின் மிகப் பெரிய வெட்கக்கேடு. இது ஒரு வகையான அடிமைத்தனம் என்று கூறி இதை இந்திய அரசு 1993ஆம் ஆண்டு தடை செய்தது. அப்போது முதல் மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்துவது குற்றமாக்கப்பட்டுள்ளது.
இருந்தும், ஏழ்மை காரணமாகவும் தாழ்ந்த சாதியினர் என்பதாலும் பல்லாயிரக்கணக்கானோர் இன்னமும் இந்த வேலையைச் செய்து வருகின்றனர்.
இவர்களின் படிப்பறிவின்மை, பேச்சுவார்த்தை மூலம் நியாயமான சம்பளத்தை நிர்ணயிக்க முடியாத நிலை, சமுதாயத்தில் அபாயத்தை சந்திக்கக்கூடிய நிலை, ஏழ்மை, சட்ட மேலாண்மை இல்லாத நிலை போன்றவற்றால் இதுபோன்ற மிக மோசமான, ஆபத்துகள் நிறைந்த துப்புரவுப் பணிகள் தற்காலிக அடிப் படையில் வேலை இல்லாதோரிடம் வழங்கப்படுகின்றன.
இதுபோல் கண்காணிப்பு முறை ஏதும் இல்லாமல் சுயேச்சையாகப் பணிபுரிவோருக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. கழிவுநீர் குழாயை சுத்தம் செய்து வரும் திரு நாராயணசாமி முனியப்பா, 66, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே பணியில் ஈடுபட்ட தமது 25 வயது மகனை இழந்தார்.
“பூமிக்கடியில் உள்ள கழிவுநீர் சாக்கடைக்குள் இறங்க எனது மகனை நகராட்சி குத்தகைதாரர் கட்டாயப்படுத்தினார். சாக்கடையில் இருந்து கிளம்பிய நச்சுவாயுவின் துர்நாற்றத்தால் என் மகனுக்கு மயக்கம் ஏற்பட்டு அங்கேயே விழுந்துவிட்டான். உடனிருந்தவர் மீட்பதற்குள் அவன் இறந்துவிட்டான்,” என்று நடந்ததை விவரித்த நாராயணசாமி, மகன் இறந்த கோலத்தை தம்மால் இன்று வரை மறக்க முடியவில்லை என்றார்.
இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ‘நாட்டை சுத்தம் செய்வோம்’ என்ற நாடளாவிய இயக்கம் 2019ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. அதன் ஓர் அங்கமாக வசதிகுைறந்த பகுதிகளில் வாழும் மக்களின் வீடுகளில் கழிவறைகள் கட்டி இயந்திர முறையில் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அந்த நிலையிலும் கழிவுநீர்க் குழாய்களிலும் கழிவுநீர்த் தொட்டிகளிலும் தவறி விழுந்து 110 பேர் இறந்தனர். இதில் கடந்த பத்தாண்டுகளில் வாரம் ஒன்றுக்கு ஒருவர் அல்லது இருவர் கழிவுநீர் வாயு துர்நாற்றம், அல்லது பூமிக்கடியில் உள்ள கழிவுநீர் சாக்கடைகளில் விழுந்ததன் காரணமாக உயிரிழந்த தாக தகவல்கள் கூறுகின்றன.
கடுமையான சட்ட விதிமுறைகள் இருந்தபோதிலும் கழிவுநீர் அகற்றுவோர் உயிரிழந்தது பற்றி போலிஸ் புகார் கொடுப்பது இந்தியாவில் அரிதாகவே உள்ளது.
இதனால், பூமிக்கடியில் உள்ள சாக்கடைகளில் பணியாளர்களை சட்டவிரோதமாக வேலை செய்யச் சொல்லும் முதலாளிகள் எவ்விதத் தண்டனையுமின்றி தப்பிக்கின்றனர்.
இதைச் சரிசெய்ய இவர்களுக்கென மீட்சித் தொகுப்புத் தொகை, திறன் பயிற்சித் திட்டங்கள் போன்றவற்றை இந்திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
ஒருமுறை வழங்கப்படும் ரூபாய் 40,000 நிதியுதவியுடன் குறைந்த வட்டிக் கடனாக 1.5 மில்லியன் ரூபாயும் இவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கழிவுநீர்த் தொட்டி, சாக்கடைகள் போன்றவற்றை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய நாட்டின் 243 நகரங்களில் இம்மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இவை யாவும் அடிமட்டத்தில் எந்தவொரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.