சென்னை: தமிழகத்தில் கொேரானா பரவலைக் கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தேவை ஏற்பட்டால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப் படலாம் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்ட கூட்டத்தில், கிருமிப் பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, விதிமுறைகளைக் கடுமையாக்குவது குறித்து ஆலோ சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிருமிப் பரவலுக்கு மத்தியில் ‘பிளஸ் 2’ பொதுத்தேர்வும் நடத்தப்பட உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் யோசனைகள் கேட்கப்பட்டுள்ளது.
எனினும் கூட்டத்தில் ஆலோ சித்தது குறித்தும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்தும் அரசிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, கடந்த வாரம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்த அரசு, தொடர்ந்து மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.