உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்திடுங்கள்.
யாரெல்லாம் தடுப்பூசி போட்டிக்கொள்ளலாம் அல்லது போட்டுக்கொள்ளவேண்டும்?
கொவிட்-19 தடுப்பூசி பின்வருவோருக்கும் உகந்தது:
- இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்தக் கொழுப்பு, நீரிழிவு நோய் போன்ற நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள்
- மருந்து, உணவு அல்லது பூச்சிக்கடிகளுக்குக் கடுமையற்ற ஒவ்வாமைகள் உள்ளவர்கள்
- தோல் அழற்சி அல்லது மூச்சுத்தடை நோய் (ஆஸ்துமா) உள்ளவர்கள்
- G6PD குறைபாடு உள்ளவர்கள்
- சீனப் பாரம்பரிய மருந்துகளை உட்கொள்பவர்கள்
- சிறுநீரகச் சுத்திகரிப்பு சிகிச்சையை மேற்கொள்பவர்கள்
- இரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்க மருந்து உட்கொள்பவர்கள், நிலையான இரத்தக்கசிவு அல்லது இரத்த உறைவுத்தடுப்புக் குறைபாடுகள் உள்ளவர்கள்
நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம், அதனைப் போட்டுக்கொள்ள இயலாதோரையும் பாதுகாக்க முடியும், எ.கா.
- 16 வயதிற்குக் குறைவானோர்
- கர்ப்பிணிப் பெண்கள்
- கடுமையான நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்கள், எ.கா. அண்மையில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டோர், புற்றுநோய் சிகிச்சை பெற்று வருவோர்
- உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒவ்வாமை உள்ளவர்கள்
உங்களது மருத்துவ நிலை பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை எனில், தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கு முன்பு, மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள்.
மேல் விவரங்களுக்கு, vaccine.gov.sg என்ற இணையத்தளத்தை நாடவும் அல்லது 1800-333-9999 என்ற எண்ணை அழைக்கவும்