பிளவை உண்டாக்கி நடிகர் சங்க ஒற்றுமையைச் சீர்குலைத்துவிட்டதாக விஷால் தரப்பினர் மீது நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார். நடிகர் சங்கம் நன்றாகச் செயல்பட வேண்டும் என்றும் நடிகர் நடிகைகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றும் தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். "சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்து கொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை.
என்னைப் பற்றி ஊழல் புகார்களைக் கூறுகிறார்கள். முதலில் ஒரு தொகையை ஊழல் செய்துவிட்டதாகக் கூறினர். பின்னர் இன்னொரு தொகையைச் சொன்னார்கள். இப்போது ஒரு தொகையைச் சொல்கிறார்கள். ""நடிகர் சங்கத்தில் மோதல், அடிதடி, தகராறு என்று கேள்விப்பட்டேன். எனது மனைவி மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டேன். நடிகர் சங்கம் என்றால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் பிளவும், மோதலும் ஏற்படுவது வேதனை," என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.