சிரியாவில் கிளர்ச்சித் தரப்பினர் வசம் இருந்த அலெப்போ நகரைக் கைப்பற்ற அரசாங்கப் படை பல நாட்களாக கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில் அலெப்போ நகரின் பல பகுதிகளை சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் கைப்பற்றிவிட்ட நிலையில் அந்நகரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தினர் முன்னேறிச் செல்கின்றனர். அலெப்போவின் பழைய நகர் ஒன்றிலிருந்து கிளர்ச்சிப் படையினர் முழுமை யாக வெளியேறிவிட்டதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுமார் 80,000 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கிளர்ச்சியாளர்களிடமிருந்து அரசாங்கப் படையினர் கைப்பற்றிய அலெப்போ நகரின் ஒரு பகுதி இது. படம்: ஏஎஃப்பி