கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'குட்லக் சகி' திரைப்
படம் 'ஜீ 5' தளத்தில் வெளியாகும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அதிர்ச்சி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரையரங்கில்தான் படம் வெளியாகும் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இதுபற்றி தயாரிப்பாளர் சுதிர் சந்திர பத்ரி கூறுகையில், "குட்லக் சகி படத்தில் கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு ஆகியோர்
நடித்திருக்கின்றனர். நரேஷ் குகுனூர் இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு என்னுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை
யமைத்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஒரு கலவையான திரைப்படமாக இது உருவாகி உள்ளது. ஜெகபதி பாபு
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே வெளி
யிடப்பட்டது. ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இறுதியில் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தை சென்ற மாதம் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்த சமயத்தில் கொரோனா தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டன.
"இந்நிலையில், 'குட்லக் சகி' திரைப்
படம் 'ஓடிடி'யில் வெளியாக உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த தகவலில் உண்மையில்லை. விரைவில் படம் திரையரங்குகளில் தான் வெளியாகும். அதை நாங்களே அறிவிப்போம். அதுவரை அனை வரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்," என்று கூறி வேகமாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் 'நடிகையர்
திலகம்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார்.
ஆனால், கீர்த்தி சுரேஷ் நடித்து அண்மையில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. மேலும் 'ஓடிடி'யில் வெளியான அவரது 'பென்குயின்' படமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. உடல் எடையைக் குறைத்ததில் அவருடைய தோற்றமே மாறிப்போனது. அதனால் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.
தெலுங்கில் இவர் நடித்து வெளிவந்த 'ரங்குதே' படம், ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றது. காதல்
படமாக வெளிவந்த இந்தப் படத்தில் படுக்கை அறை காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
'கீர்த்தி சுரேஷா இப்படி நடித்திருக்கிறார்?' என்று ஒருசிலர் விமர்சித்தாலும் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவர் திடீரென கவர்ச்சிக்கு மாறியதற்கு
உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
'ரங்குதே' படத்தில் நடிகர் நிதினுடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக நடித்த காட்சிகளின்
படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் கவர்ச்சி காட்டி நடிக்க நானும் தயார் என கீர்த்தி சுரேஷ் மறைமுகமாக சொல்
வதாக திரைத்துறையில் பேச்சு அடிபட்டது.
தமிழில் ரஜினிகாந்த்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா'
படத்திலும் நடித்து வருகிறார்.
இவற்றுடன் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் 'அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்ற சரித்திர கதையில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடற்படைகளின் உதவியுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய குன்ஹாலி மரைக்காயரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் தோற்றம் வெளியாகி உள்ளது.
அதில் கீர்த்தி சுரேஷ் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்கள் அணிந்து இருக்கிறார். புகைப்படத்தில் அவர் ராணிபோல் இருப்பதாக ரசிகர்கள் வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
நடிகை கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனின் பாலிவுட் படமான 'மைதான்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக உடல் இளைத்து ஒல்லியாக மாறினார். ஆனால், கடைசி நேரத்தில் கீர்த்தி சுரேஷை நீக்கி விட்டு பிரியாமணியை அந்தப் படத்தில் படக்குழு ஒப்பந்தம் செய்தது.
அதனால் மன அமைதி இழந்த கீர்த்தி சுரேஷ் தினமும் யோகா செய்யத் தொடங்கி இருக்கிறார். யோகா செய்வதால் மன அமைதி கிடைப்பதாக பதிவிட்டு, யோகா செய்யும் படங்களையும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.