கொடைக்கானல்: இந்தியா முழுவதும் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை காரணமாக நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வருகின்றனர்.
ஆனால், இந்தப் பாதிப்புகள் எதுவும் இல்லாமல் "கொரோனா என்றால் என்ன?" என்று கேள்வி கேட்கும் நிலையில் கொடைக்கானலில் வசிக்கும் வெள்ளகவி கிராம மக்கள் உள்ளனர்.
இவர்களிடம் கொரோனா அச்சம் என்பது துளி கூட இல்லை. அதேேபால், முகக்கவசம் அணியாமல் தங்களது பணிகளைக் கவனித்து வருகின்றனர்.
மூலிகைகள் நிறைந்த காட்டுப் பகுதிக்கு நடுவே தங்களது கிராமம் அமைந்துள்ளதால் எந்த ஒரு தொற்றும் அண்டாமல் மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.
ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கூறப்படும் இந்தக் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு ஏலக்காய், காபி, அவக்காேடா, மிளகு உள்ளிட்ட மலைப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை குதிரைகளில் ஏற்றிச் சென்று விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
"சளி, காய்ச்சல், தலைவலிக்கு கூட மருந்து மாத்திரைகள் பயன்படுத்தாமல் கைவைத்தியம் செய்து கொள்வதாகவும் இங்கு விளைவிக்கப்படும் சத்தான காய்கறிகளை அதிகம் உண்பதாலும் மூலிகைகள் நிறைந்த வனப்பகுதிக்கு நடுவே தங்கள் கிராமம் அமைந்துள்ளதாலும் நோய்த்தொற்று அண்டாமல் வாழ்கிறோம்," என்று வெள்ளகவி மக்கள் கூறுகின்றனர்.
இந்த கிராமத்தைச் சுற்றி நிறைய காவல் தெய்வங்கள் இருப்பதால் காலணி அணியாமல் வெறும் கால்களுடனே சுற்றி வருகின்றனர்.
தங்கள் கிராமத்திற்கு விரைவில் சாலை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.