இந்திய வங்கிகளில் ரூ.2 லட்சத் துக்கு மேல் கணக்கில் போட வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் (பான்) தேவை என்று இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதுவரையில் 2.5 லட்சம் ரூபாயாக இருந்த இந்த வரம்பு இப்போது 2 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தையும் ஊழலை யும் ஒழிக்கும் நோக்கில் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீட்டுக்கொள் ளப்பட்டதைத் தொடர்ந்து வங்கிப் பரிவர்த்தனைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
எனினும், பல்வேறு நூதன வழிகளில் கறுப்புப் பணத்தை மாற்ற சிலர் முயன்று வருகின்றனர். ஏழை மக்களின் வங்கிக் கணக்கு களில் கறுப்புப் பணத்தைப் போட்டு வெள்ளைப் பணமாக மாற்றுவதாக வும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டு, ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக வங்கியில் போட புதிய நிபந்தனை களை மத்திய வங்கி விதித்துள் ளது.