இலங்கையைச் சேர்ந்த திருமதி பி.ஜி. இந்திராணி ஃபெர்னாண்டோ 23 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு வந்தபோது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட பேசத் தெரியாது. தமது முதலாளிகளான திருவாட்டி வேரா பாலகிருஷ்ணன், திரு விக்டர் சியா ஆகியோரின் உதவியாலும் ஊக்குவிப்பிலும் தற் போது திருமதி இந்திராணி ஆங்கிலத்தில் பேசுவதுடன், மளிகைப் பொருட்கள் பட்டியலை ஆங்கிலத்தில் சுயமாகவே எழுதுகிறார்.
முதல்படியாக, மேசை, நாற்காலி போன்ற வீட்டுப் பொருட்கள் மீது அவர்கள் ஆங்கிலத்தில் பெயர் எழுதி ஒட்டிவைத்தனர். இவ்வாறு படிப்படியாக அவருக்கு ஆங்கிலச் சொற்களை அறிமுகப்படுத்தினர். மூன்று பிள்ளைகள் உள்ள சியா குடும்பத்துக்கு வீட்டு வேலை களைச் செய்யும் பணிப்பெண் ணாக மட்டுமின்றி, வயதானவர்க ளையும் பிள்ளைகளையும் நன்கு கவனித்துக்கொள்பவராகவும் நல்ல சமையல்காரராகவும் திறன் மிக்க பணியாளராகவும் உள்ள திருமதி இந்திராணியின் முயற் சியை அங்கீகரிக்கும் வகையில் திருவாட்டி பாலகிருஷ்ணன் இவரை இவ்வாண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் பணிப்பெண் விருதுக்கு நியமித்தார்.