சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த வேலப்பன்சாவடியைச் சேர்ந்த அர்ச்சுனன், 48, உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த சுனில்குமார் என்பவர் படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில், குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட கார் 40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்து, கீழே இருந்த வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் உயிரிழந்தார். மற்ற மூவரும் இருக்கை வார் அணிந்திருந்ததால் காயத்துடன் உயிர் தப்பினர். படம்: ஊடகம்