தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒருசேர உருவாகும் புதிய படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார்.
இதற்காக அவருக்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளது. இதுவரை அவர் பெற்று வந்த சம்பளத்தைவிட இது பல மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
ஒரே சமயத்தில் இரு மொழிகளில் தயாராகும் படங்களில் நடித்தால் நடிகர்களின் சம்பளம் அதிகரிக்கிறது. அண்மையில் சிவகார்த்திகேயனும் கூட இவ்வாறு தயாராகும் படத்தில் நடிக்க ரூ.25 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது.
இதனால் மற்ற நடிகர்களும் இத்தகைய வாய்ப்புக்காக காத்திருப்பதாகத் தகவல்.
இதேபோல் பிரசன்னா, நந்தா, உதயா, விக்ராந்த் உள்ளிட்டவர்கள் இணையத் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.