மணிக்கட்டு தங்கச் சங்கிலியைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஒருவருக்கு வயது 32, மற்றவருக்கு வயது 34.
இம்மாதம் 6ஆம் தேதி பிற்பகல் 2.05 மணியளவில் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என யூனோஸ் கிரசெண்டில் உள்ள அடகுக்கடையினர் புகார் அளித்திருந்தனர். அதன் மதிப்பு சுமார் 4,000 வெள்ளி.
இதையடுத்து பிடோக் நிலையப் போலிசார் தீவிர விசாரணையில் இறங்கி, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது சங்கிலியைத் திருடிய இருவர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களை உடனே கைது செய்த போலிசார் அவர்களிமிருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
இருவரும் இதற்கு முன்பு இதே போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இருவர் மீதும் நேற்று திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.