மும்பை: உலகளவில் மும்பைதான் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்பட வேண்டியதில்லை என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் மும்பையில் நிகழ்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடூர புத்தியின் விளைவு என அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான 'சாம்னா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இச்சம்பவத்துக்காக சிலர் முதலைக்கண்ணீர் சிந்தும்போது அது பயத்தை உருவாக்குகிறது. இது சம்பவத்தின் தீவிரத் தன்மையை அழிக்கும் செயல்," என சிவசேனா கூறியுள்ளது.
பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.