தாவரங்கள், இயற்கை கட்டமைப்பின் மூலம் உயிரியல், சுகாதாரம், மருந்தியல் ஆகிய துறைகளின் ஆய்வு மேம்பாட்டுக்கான புதிய ஆய்வுக் கழகத்தை ட் நேற்று தொடங்கிவைத்தார்.
'சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடைவர்சிட்டி', உள்ளூர், வட்டார தாவர வகைகள் மீது ஆய்வு மேற்கொள்ளும்.
இந்த மூலிகை பல்லுயிரி (பயோடைவர்சிட்டி), மருத்துவத் திட்டத்தில் புதிய தொழிநுட்பம் வாயிலாகத் தாவரங்களை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து சாறு எடுக்கப்படும். அவற்றைக் கொண்டு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் குணப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
உணவு பல்லுயிரி, ஊட்டச்சத்துச் திட்டத்தின் கீழ், உணவே மருந்து என்ற கண்ணோட்டத்திலிருந்தும் வழக்கமான சிகிச்சையோடு, உணவையும் பயன்படுத்தி எவ்வாறு நோய்களைச் சமாளிக்கலாம் என்றும் ஆராயும்.
'அர்பன் பயோடைவர்சிட்டி அண்ட் வெல்னஸ்' திட்டம் சுற்றுச்சூழல் மீது பல்லுயிர் ஏற்படுத்தும் தாக்கங்களையும். தாவரங்களின் வடிவம், வண்ணம், வாசனை ஒருவரது சுகாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராயும். உதாரணத்துக்கு 'இசென்ஷல் ஆயில்ஸ்' ஒருவரது பதற்றநிலையையும் தூக்கம் இன்மையையும் போக்குவதில் எப்படி உதவும் என்பது குறித்து இத்திட்டத்தின் கீழ் ஆராயப்படும்.